search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்காழி கொலை"

    மது குடித்து வந்து கொலைமிரட்டல் விடுத்த மருமகனை மாமியாரே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது36). கொத்தனார். இவருக்கும், சட்டநாதபுரத்தை சேர்ந்த ஆண்டாள் மகள் ரம்யாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பத்மஸ்ரீ(4) என்ற பெண் குழந்தை உள்ளது. கணேசனுக்கும், ரம்யாவிற்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் ரம்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கொள்ளிடம் போலீசில் ரம்யாவின் தாயார் ஆண்டாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணேசன், சட்டநாதபுரம் திருமுருகன் காலனியில் உள்ள தனது மாமியார் ஆண்டாள் வீட்டிற்கு அடிக்கடி மது குடித்து விட்டு சென்று தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்றும் ஆண்டாள் வீட்டிற்கு குடித்துவிட்டு கணேசன் வந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து கணேசனின் தந்தை ராஜேந்திரன் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு, சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சட்டநாதபுரம் வி.ஏ.ஓ.விடம் சென்று ஆண்டாள் தனது உயிருக்கு கணேசனால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து சம்பவத்தன்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறி சரணடைந்தார்.

    இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகள் ரம்யா தூக்கு மாட்டி இறந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கணேசன் குடித்து விட்டு வந்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும். நேற்று இரவு குடிபோதையில் வந்த கணேசன் பெட்ரோல் மற்றும் கத்தியை எடுத்துவந்து என்னை அடித்து துன்புறுத்தியதோடு என்னையும், எனது பேத்தியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனால் பயந்து போன நான் போதையில் மயங்கி கிடந்த கணேசன் மீது அதே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு பேத்தியுடன் தப்பிசென்று விட்டேன் என கூறினார்.

    மருமகனை மாமியாரே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் சேலம் கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Mrudercase #Bombthrowing

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி, எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47), இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், முதல் நிலை காண்ட்ரக்டராகவும் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் ரமேஷ்பாபு மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்த மர்ம நபர்கள் சிகப்பு நிற காரில் தப்பி சென்றதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும், உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டது.

    கொலை நடந்த அன்று மாலை திருக்கடையூர் அருகே கருவேலக்காட்டில் கேட்பாரற்று சிகப்பு நிற கார் ஒன்று நிற்பதாக பொறையார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிகப்பு நிற காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரனை மேற்கொண்டனர். இதில் மேற்படி காரில் எழுதப்பட்டிருந்த நம்பர் போலியானது என்றும், அது ஒரு இருசக்கர வாகனத்தின் நம்பர் என தெரியவந்தது. இதன் அடிப்படையில் காரின் என்ஜீன் நம்பர், சேஸ் நம்பர் ஆகியவற்றை ஆய்வு செய்து உண்மையான உரிமையாளரை தேடி போலீசார் சேலம் சென்றனர். விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கார் உரிமையாளர் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வரதராஜனை சீர்காழி அழைத்து வந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சேலம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு பார்த்திபன், அருண்பிரபு, பிரேம்குமார் ஆகிய 3 பேர் சரணடைந்தனர். இருப்பினும் சரணடைந்த 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது உண்மை தெரியவரும்.

    இந்நிலையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி கொலை தொடர்பாக நேரடி பார்வையில் விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் உண்மை குற்றவாளி பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். #Mrudercase #Bombthrowing

    சீர்காழியில் இன்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். #Mrudercase #Bombthrowing

    சீர்காழி:

    சீர்காழியில் இன்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

    சீர்காழியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சீர்காழி தென்பாதி திரிபுரசுந்தரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது40). கட்டிட காண்டிராக்டராக இருந்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ்பாபு இன்று மதியம் 12 மணியளவில் தனது காரில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் பஸ் உரிமையாளரை சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரின் கார் டிரைவர் இளவரசன் (30) காரை பஸ் உரிமையாளர் வீட்டு முன்பு நிறுத்தினார். காரின் பின் சீட்டில் ரமேஷ்பாபு அமர்ந்திருந்தார்.

    அப்போது பீடாரி வடக்கு வீதியில் அதிவேகத்தில் நுழைந்த ஒரு கார் ரமேஷ்பாபு காரின் முன்பு சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டது. அதில் 10 பேர் கொண்ட கும்பல் அமர்ந்திருப்பதை கண்ட ரமேஷ்பாபு சுதாரிப்பதற்குள் காரில் இருந்து இறங்கிய கும்பல் ரமேஷ்பாபு காரின் மீது அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். தாக்கியுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

     

    கொலை நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டிருந்த காட்சி.

    அப்போது ரமேஷ்பாபு தன்னை காத்துக் கொள்ள காரில் இருந்து இறங்கி தப்பி செல்ல முயன்றார். ஆனால் சுற்றி வளைத்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த ரமேஷ்பாபு அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் பின்னர் அங்கிருந்து தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர்.பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் பட்டப் பகலில் இந்த கொலை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.டி.எஸ்.பி., சேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் உடனடியாக ரமேஷ்பாபு உடலை அங்கிருந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் காரில் வந்த கும்பல் யார்? எதற்காக ரமேஷ்பாபுவை கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதி கடைத் தெருவில் கண்காணிப்பு கேமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ்பாபுவிற்கு சுஜா என்ற மனைவியும், ஹர்சவதன் (11)என்ற மகனும், வர்ஷா(8) என்ற மகளும் உள்ளனர்.

    பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள போக்குவரத்து நிறைந்த கடைத்தெருவில் அ.தி.மு.க பிரமுகர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Mrudercase #Bombthrowing

    ×